💞🙌🏽🕉🙏🏾✨👣🌸🌷💐
*கொஞ்சம் பூவும், நிறைஞ்ச மனசும் !!!*
சில சமயங்களில் தெய்வத்தின் அருளை நாம் மனிதர்கள் மூலமாக புரிந்து கொள்கிறோம் !
#ராதேக்ருஷ்ணா
*நெகிழ வைத்தவர்கள் - 1*
நானும் என் மனைவியும் Akila Balasubramanian நவம்பர் 25ம் தேதி பண்ருட்டிக்கு ஒரு கல்யாணத்திற்க்கு போயிருந்தோம்.
அப்போது #சரநாராயண #பெருமாள் சன்னிதிக்கு போயிருந்தோம். அங்கே வாசலில் இந்த இரண்டு வயதான அம்மாக்கள் பூ விற்றுக்கொண்டிருந்தார்கள்.
எப்போதுமே இது போல் உழைப்பவர்களைக் கண்டால் ஒரு தனி அன்பு, மரியாதை, எனக்கு வரும்.
*இவர்கள் போன்றவர்களிடம் நான் பேரம் பேசுவது கிடையாது. #உண்மையாய் #உழைக்கிறார்கள். கார் பங்களா என்று சொத்து சேர்த்து ஆடம்பர வாழ்க்கை வாழ உழைப்பவர்கள் அல்ல இவர்கள். #வயிற்றுப் #பிழைப்பாகவும், தங்கள் குடும்பத்திற்கு பண உதவியாய் இருக்கவே உழைக்கிறார்கள். வயதான காலத்தில் அக்கடா என்று இல்லாமல், தன்னால் முடிந்ததை செய்து #பெண்டு #பிள்ளைகளுக்கு #உதவியாக இருக்கிறார்கள்.*
ஆசையாய் தெய்வத்திற்கு பூ தொடுத்துத் தருகிறார்கள். #இவர்கள் இங்கே #பூ #விற்பதால்தானே, நாம் #வாடாத #மலர்களை வாங்கி பெருமாளுக்கு #சாற்றமுடிகிறது. நாம் நம் வீட்டில் இருந்து கொண்டு சென்றால், நம் ஊர் வெய்யிலில் வாடிவிடுமே.
*அந்த ஊர் பெருமாளுக்கு எத்தனை முழம் வேண்டும், எத்தனை சன்னிதிகள் என்பதெல்லாம், இவர்களுக்குத் தானே நம்மைவிட நன்றாகத் தெரியும். அதனால் இவர்களிடம் வாங்குவதை நான் ஆனந்தமாக பாக்கியமாக கருதுகிறேன். இவர்கள் கோயிலைப் பற்றி, மூர்த்திகள் பற்றி சொல்வதே தனி அழகு.*
இடதுபுறம் ஒரு மூதாட்டியும் ,வலதுபுறம் ஒரு மூதாட்டியும் பூ விற்றுக்கொண்டிருந்தார்கள். இடதுபுறம் உள்ள மூதாட்டியிடமிருந்து நான் துளசி வாங்கிக்கொண்டு இருந்தபோது, என் மனைவியிடம் வலதுபுறம் உள்ள மூதாட்டியிடமிருந்து பூ வாங்கச்சொன்னேன். #இருவரிடமும் #வியாபாரம் செய்தால் இருவருக்குமே #ஆனந்தம் என்பதால் இப்படி செய்வதுண்டு.
சில நூறு ரூபாய்களுக்கு தனித்தனியாக இருவரிடமும் பூ வாங்கிக்கொண்டு 500ரூபாய் தனித்தனியாக இருவரிடமும் கொடுத்துவிட்டு மீதிப்பணத்தை தரிசனம் செய்துவிட்டு வாங்கிக் கொள்கிறோம் என்று சொல்லிவிட்டு கோயிலுக்குச் சென்றோம்.
மீண்டும் வந்தவுடன் இருவரின் முகத்தில் அத்தனை சந்தோஷம். மீதி சில்லறை வாங்க சென்றோம். ரங்கநாதர் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்யுங்கள். கூப்பிடு தூரம் என்று ஆசையாய் சொன்னர்கள். அத்தனை அழகான பழைய கோயில் என்றார்கள். இங்கேயே பூ வாங்கிச்செல்லுங்கள் என்றார்கள். சரி என்று இருவரிடமும் மீதி பணத்திற்கு ரங்கநாதர், ரங்கநாயகி எத்தனை முழம் வேண்டுமென்று கேட்டு வாங்கிக்கொண்டோம்.
அவர்கள் அப்போது சொன்னது... *சாமி பெருமாள் அருளால இன்னிக்கு நல்லா படியளந்தீங்க...மவராசன், மவராசி நல்லா இருங்க* நானும் என் மனைவியும் என் சிஷ்யனும் அசந்தேபோனோம். ஏனென்றால் பெருமாள் அருளை அவர்கள் உணர்ந்தது. எங்களையும் உணர வைத்தது. வாழ்வில் தெய்வம் நமக்கு எத்தனையோ நன்மைகள் செய்கிறது. ஆனால் நாமெல்லாம் என் முயற்சி, என் புத்திசாலித்தனம் என்றெல்லாம் பிதற்றிக்கொண்டு அலைகிறோம்.
*ஆனால் சில நூறு ரூபாய்க்கு பெருமாளின் அருளை உணர்ந்த அவர்களின் பக்தியும், உழைப்பும், ஆனந்தமும் என்னை மெய்சிலிர்க்கவைத்தது.* அவர்களின் ஆனந்தம் மனதில் அப்படியே பசுமையாய் நிற்க அரங்கனைக் காண ஆசையாய் காரில் ஏறினோம். அவர்களோடு ஒரு போட்டோ எடுக்க ஆசைவரவே மீண்டும் இறங்கி அவர்களிடம் கேட்டதற்கு வாயெல்லாம் பல்லாக சந்தோஷமாக ஒத்துக்கொண்டார்கள். நன்றியுடன் அந்த தாய்மார்களைப் பார்த்து திருப்தியோடு காரில் ஏறினோம். இருவரும் ஓடிவந்து கொஞ்சம் பூ கொடுத்தார்கள். நான் கேட்டேன் எதற்காக என்று ?!?
*அவர்கள் சொன்னார்கள் "பொண்ணு வெச்சுக்கட்டும் சாமி" என்று என் மனைவியை பார்த்தார்கள். இந்த அன்பிற்கு என்ன சொல்ல நாங்கள்?!? எதைத்தர?!?...*
ஆனந்தமாக நெகிழ்ச்சியோடு அவர்கள் தந்த பூவையும் ரங்கநாயகிக்கு ஆசையாய் சமர்ப்பித்து, அவள் பிரசாதமாக மீண்டும் பெற்று, தலையில் சூட்டிக் கொண்டாள் என் மனைவி...
*இவர்கள் போன்ற உன்னதமானவர்களே சனாதன தர்மத்தின் ஆணிவேர்கள்...*
சரநாராயண பெருமாள் பாக்கியம் பெற்றவர் ..
இன்னும் பலர் இப்படி பல ஊரில் சந்தித்திருக்கிறேன்... வளரும்...
©குருஜீ கோபாலவல்லிதாசர்
27/11/2018- மதியம்1.34
💞👣💐✨🙏🏾🌷🕉🕉🙌🏽